Tuesday, 24 January 2012

மீண்டும் ரஞ்சி சாம்பியன் ஆனது ராஜஸ்தான்; தமிழ்நாடு அணி ஏமாற்றம்!




சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி இறுதிப் போட்ட்யில் 5ஆம் நாளான இன்று தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் 2 விக்கெட்டுகளைப் பற்கொடுக்க இரு அணிகளும் போட்டியை முடித்துக் கொண்டன. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ராஜஸ்தான் வெற்றி பெற்று ரஞ்சி சாம்பியன் ஆனது.

முதல் இன்னிங்சில் சக்சேனாவின் மராத்தான் இரட்டை சதத்துடன் ராஜஸ்தான் 621 ரன்களைக் குவிக்க தமிழ்நாடு அணி சரிவு கண்டது. ஆர்.ஆர்.சிங் துவக்க விக்கெட்டுகளை வீழ்த்த தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒருமுறை நெருக்கடியில் விளையாடி 150 ரன்களைக் குவித்தார். தமிழ்நாடு அணி எடுத்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 295 ரன்களில் தினேஷ் கார்த்திக் 150 ரன்கள்!

ராஜஸ்தான் அணி இரண்டாவது முறையாக தொடர்ந்து ரஞ்சி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ராஜஸ்தான் அணிக்கு ரூ.2 கோடிக்கான காசோலையும், தமிழ்நாடு அணிக்கு ஒரு கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் ராஜஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிறகு தமிழ்நாடு அணி கட்டாய ஓவர்களில் சிலவற்றை எதிர்கொண்டது. 13 ஓவர்கள் விளையாடிய தமிழ்நாடு 8 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை வேறு பறிகொடுத்தது.

சமீப காலங்களில் கேப்டன்சி பற்றி பேச்சு அடிபட்டு வருகையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை ராஜஸ்தான் அணியை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற ரிஷிகேஷ் கனிட்கர் தலமை மிகுந்த பாராட்டுதலுக்குரியதாகிறது.

12 ஆண்டுகளுக்கு முன்பு பங்களாதேஷில் கடைசி பந்து பவுண்டரி அடித்து புகழ்பெற்ற வெற்றியை இந்திய அணிக்கு பெற்றுத் தந்த இந்த வீரரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு துரதிர்ஷ்டவசமாக விரைவில் முடிவுக்கு வர தற்போது சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் கேப்டன் என்று நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் ராஜஸ்தான் அணியை வழிநடத்திக் காட்டியுள்ளார்.

6 ஆண்டுகளுக்கு முன்பு கனிட்கரை அவரது சொந்த மாநில கிரிக்கெட் வாரியமான மகாராஷ்டிரா கண்டு கொள்ளாமல் விடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானின் வேகப்பந்து வீச்சு புதுமுகமான ரிதுராஜ் சிங் இந்த மட்டை ஆட்டக்களத்திலும் சிறப்பாக வீசியது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் யார் எனில் தென் ஆப்பிரிக்காவின் மறக்கப்பட்ட முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெரிக் பிரிங்கிள் என்பது குறிப்பிடத்தக்கது பந்து வீச்சு ஆக்ரோஷமாக மாறியதற்கு இவரது பங்களிப்பும் அதிகம் என்று ராஜஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment